Thursday 26 November 2009

மும்பை பயங்கரம்: எத்தனை முறைப் பாடம் படிப்போம்? (வீடியோ)






சென்ற வருடம், நவம்பர் 26 ஆம் தேதி, இந்தியாவே துடித்துக்கொண்டிருந்தது! இந்தியா சந்தித்த மிக மோசமான தருணங்களில் இதுவும் ஒன்று. இந்தியாவின் மீது தீராத வெறிக்கொண்ட பகைவர்களால் மிகவும் பயங்கரமாக அரங்கேற்றப்பட்ட கொடிய கொலைவெறித் தாக்குதல் இது. குறைந்தது 173 உயிர்களை பலிக்கொண்ட இந்த காடுமிரண்டித்தனத்தை, நம்மில் நிறையப் பேருக்கு தெளிவாக எடுத்துச் சொல்ல நம்ம நாட்டில் சரியான ஆட்கள் இல்லை. ஆனால் இங்கிலாந்து நாட்டின் துணிவுமிக்க தொலைகாட்சி நிறுவனமான 'சேனல் 4' தொலைகாட்சி, சென்ற ஜூன் மாதம் 29 ஆம் தேதி ஒளிப்பரப்பிய ' Terror in Mumbai ' என்ற ஆவணப்படம் உலகையே உலுக்கியது. பார்த்தவர்களை நெஞ்சம் பதற வைத்தது. முன்பே திரைக்கதை எழுதி படமாக்கப்படும் திகில் படங்கள் கூட இப்படி நம்மை உறையவைக்குமா என்றுத் தெரியவில்லை! எங்கெங்கோ கிடைத்த பல உண்மை வீடியோக்களைக் கொண்டு ஒரு முழுப் படமாக மாற்றி இருக்கும், பல விருதுகளைப் பெற்ற டான் ரீட் அவர்கள் தயாரித்து இயக்கிய சிறந்தக் காணொளியாகும். இது மீண்டும் இன்றும் நாளையும் அதேத் தொலைக்காட்சியில் மறு ஒளிப்பரப்பப்படுகிறது.


இந்த காணொளியில், இந்தியாவில் நுழைந்த 10 தீவிரவாதிகள்,மும்பை நகரில் கால் வைத்ததிலிருந்து,வெறியாட்டம் ஆடி முடித்தவரையிலான ஒவ்வொரு மணித்துளிகளையும் அணுவணுவாக விவரிக்கிறது. தற்போது காவல்துறையிடம் சிக்கி, தன் இஷ்டத்திற்கு 'அது வேண்டும், இதுவேண்டும்' என்று இன்னும் உயிரோடு பேசிக்கொண்டிருக்கும் காசாப் என்ற விஷ ஜந்துவிடம் காவலர் நடத்திய விசாரணையும், அந்தக் கொடியவர்கள் , தங்கள் நாட்டிலுள்ள மனிதநேயம் மறந்த, தன் மக்கள்மீதே தாக்குதல் நடத்தும் தீவிரவாத தீயசக்திகளோடு பேசிய தொலைப்பேசி பேச்சுக்களும் இணைக்கப்பட்டுள்ளன. அந்தத் தாக்குதலில் படுகாயமடைந்து உயிர்பிழைத்த காவலர் மற்றும் பொதுமக்களின் பேட்டிகளையும் மனதுருக விவரிக்கிறது.

(ஆகவே இளகிய மனது கொண்டவர்கள் இதைப் பார்ப்பதை தவிர்க்கவும்.)

இந்த உலகம், மதம் என்ற மதம்பிடித்த யானையால் சின்னாபின்னமாகப்படுகிறது. வருங்கால சந்ததியரான நம் குழந்தைகள் மனதிலும் இந்த வன்மம் விதைக்கப்படுகிறது. இது எல்லா மதத்தினருக்கும் பொருந்தும். மதமாச்சர்யங்களை மறந்து, என்று அன்போடும் பண்போடும் வாழ விழைகிறோமோ அன்றுதான் இந்த உலகம் ஒரு மகிழ்ச்சியான சோலையாக இருக்கும். "தன்னைப்போல் பிறனையும் யோசி & நேசி " என்று எல்லா மதங்களும் கூறுகின்றன. ஆனால் அதை மட்டும் விட்டுவிட்டு, அதில் சொல்லியுள்ள கெட்ட விஷயங்களையே எல்லோரும் பின்பற்றுகின்றனர் என்பது விந்தையும், வேதனையுமாக உள்ளது.

இந்தப் பதிவின் மூலமாக இந்தத் தாக்குதலில் உயிர்நீத்த அப்பாவி பொதுமக்களுக்கும், அவர்களின்பால் தங்கள் இன்னுய்ரை தியாகம் செய்த காவல் துறை கடமை வீரர்களுக்கும் நம் அஞ்சலியை செலுத்துவோம். வாழ்க இந்தியா! வெல்க மனிதநேயம்.!!





நிஜக் கதாநாயகர்கள்!

Wednesday 25 November 2009

மும்பைத் தாக்குதல் முதலாம் ஆண்டு.(காணொளி)



சென்ற வருடம், நவம்பர் 26 ஆம் தேதி, இந்தியாவே துடித்துக்கொண்டிருந்தது! இந்தியா சந்தித்த மிக மோசமான தருணங்களில் இதுவும் ஒன்று. இந்தியாவின் மீது தீராத வெறிக்கொண்ட பகைவர்களால் மிகவும் பயங்கரமாக அரங்கேற்றப்பட்ட கொடிய கொலைவெறித் தாக்குதல் இது. குறைந்தது 173  உயிர்களை பலிக்கொண்ட இந்த காடுமிரண்டித்தனத்தை,   நம்மில் நிறையப் பேருக்கு  தெளிவாக எடுத்துச் சொல்ல நம்ம நாட்டில் சரியான ஆட்கள் இல்லை. ஆனால் இங்கிலாந்து நாட்டின் துணிவுமிக்க தொலைகாட்சி நிறுவனமான 'சேனல் 4' தொலைகாட்சி, சென்ற ஜூன் மாதம் 29 ஆம் தேதி ஒளிப்பரப்பிய ' Terror in Mumbai ' என்ற ஆவணப்படம் உலகையே உலுக்கியது.  பார்த்தவர்களை நெஞ்சம் பதற வைத்தது.  முன்பே திரைக்கதை எழுதி படமாக்கப்படும் திகில் படங்கள் கூட இப்படி நம்மை உறையவைக்குமா என்றுத் தெரியவில்லை! எங்கெங்கோ கிடைத்த பல உண்மை  வீடியோக்களைக் கொண்டு ஒரு முழுப் படமாக மாற்றி இருக்கும், பல விருதுகளைப் பெற்ற டான் ரீட் அவர்கள் தயாரித்து இயக்கிய சிறந்தக் காணொளியாகும். இது மீண்டும் இன்றும் நாளையும் அதேத் தொலைக்காட்சியில்  மறு ஒளிப்பரப்பப்படுகிறது.


இந்த காணொளியில், இந்தியாவில் நுழைந்த 10 தீவிரவாதிகள்,மும்பை நகரில் கால் வைத்ததிலிருந்து,வெறியாட்டம் ஆடி முடித்தவரையிலான ஒவ்வொரு மணித்துளிகளையும் அணுவணுவாக விவரிக்கிறது. தற்போது காவல்துறையிடம் சிக்கி, தன் இஷ்டத்திற்கு 'அது வேண்டும், இதுவேண்டும்' என்று இன்னும் உயிரோடு பேசிக்கொண்டிருக்கும் காசாப் என்ற விஷ ஜந்துவிடம் காவலர் நடத்திய விசாரணையும்,  அந்தக் கொடியவர்கள் , தங்கள் நாட்டிலுள்ள மனிதநேயம் மறந்த,  தன் மக்கள்மீதே தாக்குதல்  நடத்தும்  தீவிரவாத தீயசக்திகளோடு பேசிய தொலைப்பேசி பேச்சுக்களும் இணைக்கப்பட்டுள்ளன.     அந்தத் தாக்குதலில் படுகாயமடைந்து உயிர்பிழைத்த காவலர் மற்றும் பொதுமக்களின் பேட்டிகளையும் மனதுருக விவரிக்கிறது.
(ஆகவே இளகிய மனது கொண்டவர்கள் இதைப் பார்ப்பதை தவிர்க்கவும்.) 


இந்த உலகம், மதம் என்ற மதம்பிடித்த யானையால் சின்னாபின்னமாகப்படுகிறது. வருங்கால சந்ததியரான நம் குழந்தைகள் மனதிலும் இந்த வன்மம் விதைக்கப்படுகிறது. இது எல்லா மதத்தினருக்கும் பொருந்தும். மதமாச்சர்யங்களை மறந்து, என்று அன்போடும் பண்போடும் வாழ விழைகிறோமோ அன்றுதான் இந்த உலகம் ஒரு மகிழ்ச்சியான சோலையாக இருக்கும். "தன்னைப்போல் பிறனையும் யோசி & நேசி " என்று எல்லா மதங்களும் கூறுகின்றன. ஆனால் அதை மட்டும் விட்டுவிட்டு, அதில் சொல்லியுள்ள கெட்ட விஷயங்களையே எல்லோரும் பின்பற்றுகின்றனர் என்பது விந்தையும், வேதனையுமாக உள்ளது. 

இந்தப் பதிவின் மூலமாக இந்தத் தாக்குதலில் உயிர்நீத்த அப்பாவி பொதுமக்களுக்கும், அவர்களின்பால் தங்கள் இன்னுய்ரை தியாகம் செய்த காவல் துறை கடமை வீரர்களுக்கும் நம் அஞ்சலியை செலுத்துவோம். வாழ்க இந்தியா! வெல்க மனிதநேயம்.!!








Monday 16 November 2009

கங்கை நதியின் இன்றைய கதி!




இந்தியப் பிரதமர் திரு. மன்மோகன் சிங், 2008 நவம்பர் 4 ஆம் தேதி, கங்கை நதியை இந்தியாவின் தேசிய நதியாக அறிவித்தார்! அப்படி அறிவிக்கவேண்டி என்ன நிர்பந்தம்? கங்கையை விட்டால் வேறு  எந்த ஆறுக்கு அந்தப் பெருமை வரும்?  இந்த நதி பலகோடி மக்களின் நம்பிக்கையில், வாழ்க்கையில் பின்னிப்பிணைந்தது அல்லவா? இந்தியாவின் பெரும்பாலான மக்களால் மிகவும் புனிதமாகவும், கங்கைத்தாய் என்றும் கங்காதேவி என்றும் கடவுளாகவே கருதப்பட்டு வணங்கப்படும் இந்த மாபெரும் நதிக்கு தற்போது நேர்ந்திருக்கும் வருந்தக்கூடிய நிலையே அவரின் அறிவிப்புக்கு முதல் காரணம். அப்படி அறிவித்தது மட்டுமல்லாமல், மாசுப்பட்டு இருக்கும் அந்த புண்ணிய நதியை காப்பாற்ற பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.


இமய மலையில் இருந்து நிஜமாகவே மிகவும் புனிதமாக வெளிப்பட்டு, மனிதனின் பேராசையாலும், மூடநம்பிக்கைகளாலும், அரசாங்கத்தின் மெத்தத்தனத்தினாலும் மாசுப்பட்டு  கலங்கி நிற்கும் அந்த கங்கையின் கரைகளிலே ஒரு பயணம் போவோமா? நேஷனல் ஜியாகரபி நிறுவனத்தின் ' Rivers and Life ' என்ற தலைப்பில் வெளிவந்த இந்தியாவின் கங்கை, எகிப்தின் நைல் , சீனாவின் யாங்சி ஆறுகளைப்பற்றிய ஆவணப் படங்களில், (மற்ற இரு நதிகளைப் பற்றிய வீடியோ, சுற்றுப்புற  மாசு பற்றியது இல்லை!) நமது நாட்டின் கங்கையைப் பற்றிய வீடியோவை உங்களுடன்  பகிர்ந்துக் கொள்ளுகிறேன்.  பார்த்து விட்டு நீங்களும் வருந்துங்கள்.




இதில் ஒரு சின்ன ஆறுதல் என்னவென்றால், உலகின் 'மிகவும் கப்படித்த' ஆறு என்ற பெருமையை தற்போது  தட்டிச் செல்வது, இந்தோனேசியாவின் சிட்டாரம்  என்ற ஆறு!
(படம்) . ஆனால் அங்கு பிணங்கள் மிதப்பதாகத் தெரியவில்லை. இனி வருங்காலத்தில் விட்ட அந்த முதல் இடத்தை பிடித்துவிடுவோம் என்று நம்பிக்கையோடு  காத்திருப்போம்!

Friday 13 November 2009

Michael Jakson's 'Captain EO'.



நம்மில் பலருக்கு தெரியாது, மைகேல் ஜாக்சன், ஒரு 3D படத்தில் நடித்துள்ளார் என்று! அந்தப் படத்தின் பெயர் CAPTAIN EO . 17 நிமிடங்களே ஓடக்கூடிய இந்தப் படம் டிஸ்னி பார்க்குகளில் மட்டும் பிரத்தியேகமாக காண்பிக்கப்பட வேண்டி,  'ஸ்டார் வார்ஸ்' புகழ் ஜார்ஜ் லுகாஸ் அவர்களால் தயாரிக்கப்பட்டு, 'காட் ஃபாதர்' புகழ் பிரான்சிஸ் போர்ட் கப்போலா அவர்களால் இயக்கப்பட்டது. முதலில் ஸ்டீபன் ஸ்பில்பேர்க் அவர்களால்தான் இயக்கப்பட இருந்தது. ஆனால் அவர் அந்த நாட்களில் பிஸியாக இருந்ததால் அந்த வாய்ப்பு கப்போலாவிற்கு சென்றது.



1986 ஆம் வருடக் கணக்கின்படி ஒரு 17 நிமிடப் படத்திற்கு $30 மில்லியன் டாலர்கள் செலவழிக்கப்பட்டது மிகப்பெரும் தொகையாகக் கருதப்பட்டது! அதாவது ஒரு நிமிடப் படத்திற்கு $1.76 மில்லியன் டாலர் செலவிடப்பட்டு உள்ளது!
இந்தப் படத்தில் இரண்டுப் பாடல்கள் உள்ளன. இசை ஜேம்ஸ் ஹார்னர் (Die Hard, Aliens, Braveheart, Titanic,...). 'Another part of me' என்றப் பாடல், சில காலத்திற்கு பின், ஜாக்சனின் புகழ்பெற்ற 'BAD' ஆல்பத்தில் இன்னும் மெருகூட்டப்பட்டு சேர்க்கப்பட்டது. இன்னொரு பாடலான ' We Are Hear to Change the World', அவரின் 'Ultimate Collection' ஆல்பத்தில் வந்துள்ளது.




வேற்று கிரகத்தில் நடப்பதுப்போல் உள்ள காமிக் கதையை மூலமாகக் கொண்டு கதைக்களம் அமைந்துள்ளது. இதில் கதாநாயகன் கேப்டன் EO வாக மைகேல் ஜாக்சனும், நாயகி/வில்லியாக அஞ்சலிகா ஹட்சனும் நடித்துள்ளார்கள். நாகனுடன் கூட வரும் பாத்திரங்களான ஃபஸ் பால், இரட்டைத்தலை இடி & ஒடி, மேஜர்  டெமோ என்கிற இயந்திர பாதுகாப்பு அதிகாரி, அதைப்போலவே சிறிய டெமோ, யானைப் போன்ற உருவமுடைய ஹூடர் போன்ற பாத்திரங்கள் மறக்கமுடியாதவை.





ஜாக்சனின் மரணத்திற்குப்பின் வால்ட் டிஸ்னி நிறுவனத்தார், இப்படத்தை மீண்டும் வெளியிட திட்டமிட்டுள்ளாராம். அப்படி இருக்கும் படசத்தில், அவரின் ரசிகர்கள் இப்படத்தை  மீண்டும் ஒருமுறை அட்டகாசமான 3D தொழில்நுட்பத்தில் கண்டு மகிழ்வார்கள் என்பதில் சந்தேகமில்லை!  

நாமும்  அதை ஒருமுறைப் பார்ப்போமா?

Captain EO

sd | MySpace Video

Thursday 12 November 2009

CHILDREN OF GOD.



நேபாளம் நாட்டின் தலை நகரம் காட்மண்டு. அதன் நடுவே ஓடும் பாக்மதி நதி. அதன் கரையில் இருக்கும் பசுபதிநாத் கோவில். மிகவும் புனிதமாகக் கருதப்படும் இடம். இது ஒரு சிவன் கோவில். ஐந்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்துக்களுக்கும் பௌத்தர்களுக்கும் மிகவும் முக்கியமான தளங்களில் இதுவும் ஒன்று. இங்கு என்ன விசேஷமென்றால், இறந்துப் போனவர்களின் உடலை இந்த பாக்மதி நதியில் மூழ்கவைத்து, பின்பு எரித்தால் இறந்தவருக்கு சொர்க்கம் நிச்சயம் என்று நம்பப்படுகிறது. அதனால் இந்த இடம் எப்போதும், நம்ப நாட்டின் காசி மற்றும் வாரணாசி கோவில்களைப்போல் எப்போதும் பிசியாகவே இருக்கும்.

ஆனால் இப்போது நாம் பார்க்கப் போவது இவைகளைப்பற்றி இல்லை! இந்த பாக்மதி நதிக்கரையில் வசிக்கும் நிராதரவான, தன் போக்கில் திரியும் சிறுவர்களைப் பற்றியது. அவர்கள் வாழுவது இறுதிச்சடங்கு செய்யவரும் பக்தர்களின் பூஜைக் கழிவுகள்  மற்றும் பிண சாம்பல்களின் கழிவுகளில் கிடைப்பவற்றை கொண்டு எப்படி ஜீவிகிறார்கள் என்பதுப்பற்றி மனித நேயத்தோடு எடுக்கப்பட்ட ஒரு
 காணொளி. இப்படத்தில் நாம் பின்தொடரப்போவது அலேஷ் என்ற சிறுவனையும் அவனின் தம்பி மற்றும் தங்கையை. அவனின் பிச்சை எடுக்கும்,  குடிக்கார தாயையும் சந்திக்க இருக்கிறோம். இவர்களின் வாழ்க்கை சொர்கத்துக்கும் நரகத்துக்கும் நடுவே ஊசலாடுவதைக் காணமுடியும். இவ்வளவு இருந்தும் அவர்கள் எவளவு மகிழ்சியாக இருக்கிறார்கள் என்பதைப் பார்க்கும் போது வியப்பாக இருக்கிறது! ஆனால்  இப்படியும் சிறுப் பிள்ளைகள்  வாழுகிறார்கள் என்பதைப் பார்க்கும்போது நம் நெஞ்சு கனக்கிறது. இந்தப் படம் முடிந்ததும், மனிதநேயம் உள்ளவர்கள் கண்டிப்பாக அதன் தாக்கத்தை  உணருவார்கள்.

இந்தப் காணொளியை இயக்கியவர் தென்  கொரியாவைச் சேர்ந்த Yi Seung-jun என்பவர். (யார் யாருக்கு எப்படி முடியுமோ அப்படி வாசித்துக் கொள்ளவும்!). சிறந்த ஆவணப் படத்திற்கான விருதை இரண்டுமுறைப் பெற்றது. அதற்கு தகுதியானதும் கூட என்று பார்பவர்களுக்கு புரியும்.

ஆகவே நண்பர்களே, இதோ அந்த படம் உங்களின் பார்வைக்கு..... Children of God.

[ 72 நிமிடங்களுக்குப் பிறகு வீடியோ நின்றுவிடும். அப்போது உங்கள் ரூட்டர் / மோடெம்- மின் இணைப்பைத் துண்டித்துவிட்டு, ஒரு நிமிடம் கழித்து இணைத்து, மீண்டும் விட்ட இடத்திலிருந்து தொடருங்கள்.]


 


இந்த வாரம் நேபாள வாரம்  போலுள்ளது! நேற்றுத்தான் நேபாளம் குறித்த இரண்டு பதிவுகளைப் பார்த்தேன்.தற்போது நான்!  இதற்கு அடுத்து, உலகையே உலுக்கிய 'நேபாள அரசக் குடும்பப்  படுகொலை' பற்றிய வீடியோப் பதிவு. என்ன பார்க்கலாமா?

Monday 9 November 2009

மைகேல் ஜாக்சனின் கதை(கள்) [வீடியோ(க்கள்)]


ஆமாம்! மைகேல் ஜாக்சனின் கதைகள்தான். அவர் இறந்ததில் இருந்து, இன்றுவரை எத்தனை விதங்களில் வீடியோக்கள் தயாரிக்கப்பட்டனவோ தெரியவில்லை. நான் இதுவரை நான்கு வீடியோக்களை பார்த்து இருக்கிறேன். அவர் இறப்பதற்கு முன் அவரின் மீதான சர்ச்சைகளைப் பற்றிய வீடியோக்களை நாம் ஏற்கனவேப் பார்த்துள்ளோம்.  இப்போது புதிதாக வெளிவந்துள்ள அந்தக் காணொளிகளை
காண்போமா? எல்லாமே முழுநீள வீடியோக்கள். ஆகவே நேரம் ஒதுக்கி முழுமையாகப் பார்க்கவும்.

[ 72 நிமிடங்களுக்குப் பிறகு வீடியோ நின்றுவிடும். அப்போது உங்கள் ரூட்டர் / மோடெம்- மின் இணைப்பைத் துண்டித்துவிட்டு, ஒரு நிமிடம் கழித்து இணைத்து, மீண்டும் விட்ட இடத்திலிருந்து தொடருங்கள்.]


MICHAEL JAKSON: LIFE OF A SUPER STAR



THE TRUE STORY OF MICHAEL JAKSON




MICHAEL JAKSON UNMASKED




THE  MICHAEL JAKSON - STORY 1958 - 2009



இந்தத் தொகுப்பில் கடைசியாக நாம் பார்க்கப்போவது , தன் மாளிகையான நெவர் லேண்டில், தானே முன் வந்து, மார்டின் பஷீர் என்ற BBC , ITV மற்றும் ABC தொலைகாட்சி நிறுவனங்களில்  வேலை செய்தவனிடம்,(ஏக வசனத்தில் அழைப்பதற்கு வருந்தவில்லை) அப்போதைய களங்கங்களிலிருந்து தன்னை, குற்றமற்றவன் என்று நிரூபிக்க, அவனை மிகவும் நம்பி தன்னையே  ஒப்படைத்தார். ஆனால் அவனோ, அதற்கு மாறாக, அவர் பேட்டியில் கூறியதைத் திரித்து, நம்பிக்கை துரோகம் செய்தான் அந்த மார்டின் பஷீர்.  அந்த தொலைகாட்சி தொடர் வந்த இரவே அவர் இறந்துவிட்டார் என்றேக் கூறவேண்டும். மறுபடியும் திருத்தப்படவேமுடியாத அப்படி ஒரு பச்சைத் துரோகம் இழைக்கப்பட்டுவிட்டது... இதுப்பற்றி Topix வலைத்தளத்தில் ஜாக்சனின் ரசிகர்களின் கருத்துக்களைக் காண இங்கே.
இவ்வளவையும் செய்துவிட்டு அவரின் மரணத்துக்குப்பின் பஷிர்  கூறியது இதுதான்,

என்ன சொல்லி என்ன பயன்? அருமையான ஒரு மனித நேயம்மிக்க மகாக் கலைஞனை இழந்துவிட்டோம். ஈடு செய்யவே முடியாத இழப்பு.

சரி, அந்த வீடியோவைப் பார்க்காதவர்களுக்காக, இதோ....

LIVING WITH MICHAEL JACKSON



என்ன நண்பர்களே, எல்லாவற்றையும் பார்த்தாகிவிட்டதா?
சரி , இப்போது இதே பஷிரின் கயமை வெளிப்பட ஜாக்சனின் சொந்த கேமராமேனால் கூடவே எடுக்கப்பட்ட வீடியோக்களைக் காண...


வீடியோ 1, வீடியோ 2, வீடியோ 3, வீடியோ 4, வீடியோ 5, வீடியோ 6,

வீடியோ 7, வீடியோ 8, வீடியோ 9.

இப்போது ' We Are the World ' என்ற மைகேல் ஜாக்சனால்( கூட எழுதியவர் லியோனெல் ரிச்சி) எழுதிப் பாடவும் செய்த புகழ்ப்பெற்ற பாடலைப் பார்ப்போமா? இந்தப் பாடலின் பின்னணிக் கதை இதுதான்.
1984-1985 ஆம் ஆண்டுகளில், ஆப்பிரிக்காவில், குறிப்பாக எத்தியோப்பாவில் மிகக்கடுமையான பஞ்சம் தலைவிரித்தாடியது. ஏறக்குறைய  ஒரு மில்லியன் மக்கள் உணவின்றி மாண்டனர். அப்போது ஜமைக்கா நாட்டில் பிறந்து, அமேரிக்காவில் வாழ்ந்துக் கொண்டிருந்த, புகழ்ப் பெற்ற கறுப்பினப் பாடகரான ஹேரி பெலாஃபாண்ட் ( Beetlejuice படத்தில் வரும்  அவரின் பிரபல  பாடலான Banana Boat  பாடலைக் கேட்க) அவர்களின் முதல் முயற்சியால் உருவானப் பாடல் இது. 21 முக்கியப் பாடகர்களும், 22 கோரஸ் பாடகர்களாலும் பாடப்பட்டது. இந்த கோரஸில் ஜாக்சனின் சகோதர , சகோதரிகளும், மற்றும் ஹேரி அவர்களும் அடங்குவர்.
நடத்துனர், ஜாக்சனின் முக்கிய, புகழ்ப்பெற்றஆல்பங்களைத் தயாரித்த க்யுன்சி ஜோன்ஸ்.(மேலும் விவரங்களைக் காண)

இதோ அந்தப் பாடல்....


சும்மா ஏதாவது எழுதிவிட்டுப் போங்களேன்!

Monday 26 October 2009

Grizzly Man



2005 இல் வெளிவந்த இந்த ஆவணப்படம் Grizzly Man, ஏகப்பட்ட விருதுகளை அள்ளிக்குவித்து, பார்த்தவர்களை எல்லாம் தடுமாற வைத்தது. 'திமோத்தி ட்ரெட்வெல்' (Thimothy Treadwell - 1957-2003) என்ற மனிதனைப் பற்றியது. 'க்ரிஸ்லி கரடிகள் (Grizzly Bears) அல்லது கொடுங்கரடிகள்' என்று அழைக்கப்படும், அமெரிக்காவின் வடக்கு பகுதியில் உள்ள அலஸ்கா மற்றும் கனடா மலைப் பிரதேசங்களில் வாழும் கரடிகளை பற்றியே நினைத்து தன் வாழ்நாளை அர்பணித்தவர். அத்தோடு நின்றிருந்தால் பரவாஇல்லை.... ஆனால், பரிதாபம்! தான் நேசித்த கரடிகளுக்கு தான் மட்டுமல்லாமல், தன் பெண் நண்பரின் உயிரையும், உடலையும் பலியாகக் கொடுக்க வேண்டி இருந்தது!



இந்தப் படத்தை இயக்கியவர் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த புகழ்ப்பெற்ற இயக்குனரான 'வெர்னர் ஹெர்ஸாக்' (Werner Herzog) என்பவர். ஆனால் இவர் பயன்படுத்தியது எல்லாம், திமோத்தியால் எடுக்கப்பட்ட வீடியோக்களே! இந்த கரடிகள் அதன் சாம்பல் நிறத்தால் அந்தப் பெயரைப் பெற்றன. The Edge என்றப் படத்தை பார்த்தவர்களுக்கு இதன் பயங்கரம் புரியும். சுமார் 7 முதல் 8 அடி உயரம் வரை வளரும் இவை, சுமார் 400 கிலோ வரை எடை இருக்கும். திமோத்தி சுமார் பதிமூன்று வருட கோடை நாட்களில். அலஸ்கா காடுகளில் இக்கரடிகளின் பின்னே அலைந்துத் திரிந்து எடுத்தவை. காலப்போக்கில், அந்த பயங்கரமான கரடிகள் இவரை நம்பி, அன்பாக பழக ஆரம்பித்துவிட்டன என்று நம்ப ஆரம்பித்துவிட்டார்! அங்கு இருந்த வனக்காவலர்களின் எச்சரிக்கையும் மீறி, அவைகளின் மிக அருகேச் சென்று, அவைகளைத் தொடவும் முற்பட்டார். அவைகளை படமாகவும் எடுத்து, இந்த கரடிகளைப் பற்றிய விழிப்புணர்வு நிகழ்சிகளை நடத்தினார்.


 ஆனால் 2003 ஆம் வருடம், தன் 13 வது வருட விஜயத்தின் போது, அவரும் அவரின் பெண் நண்பரான ஆமி என்பவரும், ஒரு படப்பிடிப்பின் போது, ஒரு கரடியால் கொடுரமாகத் தாக்கப்பட்டு, பாதி தின்னப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டனர். இதுதான் மனிதவாழ்வு! இந்த கொடுர சம்பவத்தின் வீடியோ கிடைக்கப்பெறவில்லை. ஆனால் ஆடியோ கிடைத்திருக்கிறது! ஆனால் அதைக்கேட்ட இயக்குனர், மனம்கலங்கி, அதை இந்தப் படத்தில் சேர்க்காமல் தவிர்த்துவிட்டார். அதுமட்டுமல்லாமல் அதை அழித்துவிடவும் சிபாரிசு செய்தாராம்! இந்தப் படத்தின் மூலமாக மரணமும்,அழிவும் தவிர்கமுடியாதவை .... இயற்கையில் நமக்கென்று சில வரைமுறைகள் உள்ளன என்ற கருத்து தெரிவிக்கப்படுகிறது. இந்தப்படத்தைப் பார்த்துவிட்டு, அதன் தாக்கத்திலிருந்து என்னால் விடுப்பட சிலநாட்கள் ஆயிற்று! பரிதாப உணர்ச்சியோடுக் கூடிய சோகம் என்னைத் தழுவிக்கொண்டது. அறிவுரையை கேட்காமல் தன் வழியே சென்ற ஒரு புத்திசாலி நண்பனை இழந்ததுப்போல் உணர்ந்தேன்! என்னால் ஒரு கனத்த பெருமூச்சுத்தான் விடமுடிந்தது. உங்களுக்கு எப்படி இருந்தது என்று சொல்லுங்கள்.

  RIP, ... Grizzly Man.

[ 72 நிமிடங்களுக்குப் பிறகு வீடியோ நின்றுவிடும். அப்போது உங்கள் ரூட்டர் / மோடெம்- மின் இணைப்பைத் துண்டித்துவிட்டு, ஒரு நிமிடம் கழித்து இணைத்து, மீண்டும் விட்ட இடத்திலிருந்து தொடருங்கள்.]




Thursday 8 October 2009

ஆஸ்திரேலிய அருவருப்பு ! (வீடியோ)


 ஒரு மறைந்த,  மாபெரும்,  உலக மகாக் கலைஞனை இப்படி கேவலப் படுத்துகிறார்கள் என்றால், சாதாரண மக்களின் கதி?

Jackson Jive Racist Outrage
Posted Thu 8 Oct 2009 4:30PM BST by Johnny Famethrowa in Touching The Void

The Michael Jackson news just keeps on coming. The difference here being it's got nothing to do with the deceased King of Pop. In fact, the latest drama took place many miles from his spiritual home of California. Because producers on an Australian TV show are caught-up in an engulfing furore after allowing a Jackson 5 "tribute" act to appear, outraging judge Harry Connick Jr and, we assume, many more the world over.



Bucking international awareness stretching back years, the Jackson Jive appeared with blacked-up faces in an act that visibly upset their guest, who awarded them zero stars. Host Daryl Somers was forced to apologise, while Connick Jr (pictured) pointed to the fact his nation have "spent so much time trying to not make black people look like buffoons", insisting: "If I knew that was going to be part of the show I definitely wouldn't have done it". Famethrowa doubts the programme makers have heard the last of this...
Courtesy: Yahoo Music.
http://new.uk.music.yahoo.com/blogs/touchingthevoid/9794/jackson-jive-racist-outrage/














இது எப்படி இருக்கு....? ( எச்சரிக்கை: கொஞ்சம் கெட்ட வார்த்தைகள் உள்ளன)



We Love You Jackson!

நேட். ஜியோவின் போட்டோகிராபர்கள்.(வீடியோ)


















Coutresy: National Geographic Magazine.

ஆம். நாம் பார்த்த அனைத்துப் புகைப்படங்களும் அவர்கள் எடுத்துத்தான்! இது கடலின் ஒருத்துளி. எல்லாவற்றையும் பார்க்க வேண்டுமென்றால் ஒரு நூற்றாண்டுவரை பின்னே செல்லவேண்டும். கடந்த நூறு ஆண்டுகளாக நேஷனல் ஜியாகரபிக் நிறுவனம் செய்து வரும் எண்ணற்ற சேவைகள், மனித வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை. அதிலும் அந்நிறுவனத்தின் புகைப்படக் கலைஞர்களைப் பற்றி சொல்லவே வேண்டியது இல்லை. அவர்கள் அளித்துள்ள ஒவ்வொரு புகைப்படங்களுமே, நம்மை பரவசப்படுத்தும், துணுக்குறச்செய்யும், வாயடைத்துப் போகவைக்கும், கண்கலங்க வைக்கும்...!  அத்தகைய சிறப்பு மிக்க கலைஞர்களைப் பற்றிய ஒரு காணொளியைப் பார்ப்போமா?

Tuesday 6 October 2009

இரட்டைக் கோபுரங்களுக்கு இடையே.....(வீடியோ)










இன்னும் எத்தனைக் துயரக் கதைகள் உள்ளதோ? 9/11- 2001, உலக வர்த்தக மையக் கட்டிடங்கள் தகர்க்கப் பட்ட நாளன்று, அதன் காலடியில் இருந்த ஹோட்டல் மேரியோட் என்ற கட்டிடத்தினுள் 940 பேர்கள் இருந்தனர் என்று நம்மில் எதனைப் பேர் அறிவோம்? அந்த இருந்தக் கட்டிடங்களுமே இடிந்து இந்த ஹோட்டலின் மேல்தான் விழுந்து! அப்போது இந்த ஹோட்டலில் இருந்த உயிர்களின் கதி? இதற்க்கு விடை கீழுள்ள 'Hotal Ground Zero' என்ற காணொளியில் உள்ளது. சில்லிட வைக்கும் சம்பவங்கள் என்றுக் கூறுவார்களே, அதுதான் இது! வாருங்கள் பாப்போம்.


Monday 5 October 2009

அற்புத நடிகர் அல் பசினோ (வீடியோ)






  • தந்தை ஸல்  பசினோ. ஒரு இத்தாலிய அமெரிக்க இன்சூரன்ஸ் எஜன்ட். தாய் ரோஸ் பசினோ.




  • 17 வயதிலேயே பள்ளிக்கூடத்தை விட்டு வெளியேறிவிட்டார். பின்பு நடிப்புப் பள்ளியில் சேர்ந்துப் படிக்க ஆரம்பித்தார்.




  • அவருடைய தாத்தாப் பாட்டி, 'காட்பாதர் புகழ்' சிசிலி நாட்டின் கோர்லேஒனே என்ற இடத்தில இருந்து வந்தவர்கள். காட்பாதர் ரசிகர்களுக்கு இந்தப் பெயர் மிகவும் பரிச்சியம்.




  •  இதுவரை திருமணமே செய்யாத ஹாலிவுட் நடிகர்களில் இவரும் ஒருவர்.




  • இவர் முதல் முதலாக ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டது 1973 இல் காட்பாதர் படத்துக்காக.




  • ஆனால் அதன் பிறகு அவர் இந்த விருதை வாங்கியது இருபத்தொரு வருடங்கள் கழித்து.... 1992 இல் Sent of a women என்றப் படத்துக்காக .




  • இதற்க்கு நடுவில் இவர் இந்த விருதிற்காக ஐந்து முறைப் பரிந்துரைக்கப்பட்டார்.




  •  காட்பாதர் படத்தில் மார்லன் பிராண்டோவின் மகனாக வரும் மைகேல் கோர்லேஒனே பாத்திரத்தில் நடிக்க, அதன் இயக்குனர் பிரான்சிஸ் போர்ட் கப்போலா இவரைத் தேர்ந்தேடுத்தப்போது, படத் தயாரிப்பாளர்கள் இவரை பலமுறை வேண்டாம் என்று நிராகரித்தது விட்டனர். ஆனால் இயக்குனர் பிடிவாதமாக இருந்ததால் அந்த மாப்பெரும் வாய்ப்பைப் பெற்றார்.




  • ஆனால் காட்பாதர் II இல் நடிக்க, நிறையப் ஊதியம் கேட்டு கப்போலாவை வெறுப்படைய வைத்தார். பிறகு சாமதானமடைந்து தான் ஊதியத்தை குறைத்துக் கொண்டார்.




  • பின்னர் காப்போலோவின் Apocalypse Now (1979) பட வாய்ப்பை உதறிவிட்டார். இப்படி அவர் வேண்டாம் என்று விலகிய வெற்றிப்படங்கள் பல.




  •  அறுபது வயதில் இரட்டைக் குழந்தைகளுக்கு தகப்பனானார்.




  • தன்னுடைய குரலைப் பாதுகாக்க, தினமும் குறைந்தது நாற்பது முதல் அறுபது சிகரட் பிடிக்கும் பழக்கத்தை நிறுத்திவிட்டார். இப்போதெல்லாம் என்றாவது ஒரு மூலிகை சிகரட் மட்டும்.




  • அவரின் உயரம் 5' 7''.




  • அவரின் முக்கியமானப் படங்கள்....


  •           Panic in Needle Park.
              Godfather I,II,&III,
              Serpico,
              Dog Day Afternoon.
              And Justice for all,
              Scarface,
              Sea of love,
              Dick Tracy,
              Glengarry Glen Ross,
              Scent of a women,
              Carlito's way,
              Heat,
              Donnie Brasco,
              Devil's advocate.....

    மற்றும் பல. இதில் எனக்கு மிகவும் பிடித்தவைகளில் Dog Day afternoon ஒன்று. மிஸ் பண்ணவே கூடாத படங்களில் ஒன்று. பார்க்கவிரும்பினால்  கேளுங்கள் லிங்க் தருகிறேன்.

    இப்போது அவரைப் பற்றிய ஒரு காணொளியைப்  பார்க்கலாம்.

    Wednesday 30 September 2009

    மகாத்மா காந்தி : சமாதானத்தின் யாத்திரீகர்.(video)




    அக்டோபர் 2, இந்தியாவின் தந்தை மோகன் தாஸ் கரம்சந்த் காந்தியின் பிறந்தநாள். இந்தியாவில் இந்த நாளில் ஏறக்குறைய எல்லோருக்கும் உடனே நினைவுக்கு வருவது, விடுமுறையும், கசாப்பு மற்றும் மதுக்கடைகளின் மூடல் தான்! (ஆனாலும் எல்லாம் கிடைக்கும் என்பது வேறு விஷயம்.) நானும் இந்தியாவில் இருந்த வரையில் அதே நிலைத்தான். ஆனால் நான் தற்போது வசிக்கும் இங்கிலாந்திற்கு வந்தப் பிறகு, நம் நாட்டின் விடுதலைப் போராட்டதையும், நம் போராட்டத் தலைவர்களயும் நினைக்காத நாளே இல்லை! ஏனென்றால்   இங்கு உள்ள  சூழ்நிலை அப்படி. ஏன், எல்லா இடத்திலேயும் அப்படித்தான். இந்தியாவையும் சேர்த்து!
    மகாத்மாவைப்பற்றி நாம் சிறுவயது முதலே நாம் படித்து, அறிந்து வைத்திருக்கிறோம். நம்மில் பலருக்கு, என்னையும் சேர்த்து அவரின் சிலக் கொள்கைகளில் சில முரண்பாடுகள் இருந்தாலும் அவரே நம் தேசப்பிதா. அவரை அப்படி அழைக்கக்கூடாது என்றும் சிலர் கூறுவர். ஆனாலும் அவரைத் தவிர வேறு யாரயும் அந்த இடத்தில வைத்தப் பார்க்க முடியவில்லை என்பதே உண்மை! வேறு
     யாரவது உண்டா? No chance!
    நாம் காண இருக்கும் இந்த காணொளி, ஒரு அருமையான ஆவணப் படம்.வெவ்வேறுக் கோணங்களிலிருந்து தொகுக்கப்பட்டுள்ளது. அரியப்புகைப்படங்கள், காணொளிகள் கொண்டது. எல்லோரும், குறிப்பாக இளைஞர்களும், மாணவர்களும் பார்க்கவேண்டிய ஒன்றாகும். பார்த்துவிட்டு அப்படியே போய்விடாமல், நீங்களும் உங்களின் மரியாதையை பின்னூட்டம் முலமாக செலுத்தவேண்டுகிறேன். நன்றி.

























    Tuesday 29 September 2009

    ப்ருஸ் லீ மாற்றிய உலகம்.[Updated]





    ப்ருஸ் லீ... முப்பத்தி இரண்டே வருடம் வாழ்ந்து, வரலாறாகிப்போனவர். தற்காப்புக்கலை என்றவுடன் முதலில் நினைவுக்கு வருபவர். உலகில் அனேகமாக எல்லோராலும் அறியப்பட்டவர். ஆனாலும் அவரை பற்றி மீண்டும் மீண்டும் ஏதாவது செய்திகள் வந்துகொண்டே இருகின்றன.

    அந்த வரிசையில் நான் சமிபத்தில் ஹிஸ்டரி சேனல் அருமையாக தயாரித்து வழங்கிய " How Bruce Lee Changed the World" என்ற புதிய ஆவணப்படத்தை காண நேர்ந்தது. இதுவரை பார்த்திராத அறிய போடோக்கள் , வீடியோ கிளிப்பிங்க்ஸ் போன்றவற்றுடன், அவருடன் பழகிய மனிதர்களின் பேட்டிகளோடு, மிகவும் நேர்த்தியாக படைத்துள்ளார்கள். அது உங்களின் பார்வைக்காக.
    இது ஒன்றரை மணி நேர வீடியோ. ஆகவே நேரம் ஒதுக்கி தொடர்ந்து பார்த்தால்தான் அதன் தாக்கம் உங்களுக்கும் ஏற்படும்.

    Saturday 26 September 2009

    அர்னால்டின் உடற்கட்டு... (வீடியோ)

    புகைப்படத்திற்கு பதில் ட்ரைலர்......



  • 'அர்நால்ட்' என்றால் 'கழுகின் சக்தி' என்றுப் பொருள்.' ஸ்வார்செனேகர்' என்றால் ஆஸ்திரிய மொழியில் 'கருப்பு ஏர் உழவன்' என்று பொருள் படுமாம்.

  • ஆர்னோல்ட் ஸ்வார்செனேகர், ஆஸ்திரியா நாட்டில் 1947 ஆம் வருடம் பிறந்தவர்.

  • தாய் மொழி ஜேர்மன் மொழி. அமெரிக்கா வந்தப்போது ஆங்கிலம் அவருக்கு ஒரேக் களேபரம்.

  • அமெரிக்காவிற்கு வந்தது 1968 ஆம் வருடம், அதாவது 21 ஆம் வயதில்.
    அவரின் கண்டிப்பான தந்தை ஒரு போலீஸ் அதிகாரி.

  • சிறுவயதில் அவருக்கிருந்த மூன்று ஆசைகள்: அமெரிக்காவிற்கு செல்ல வேண்டும், நடிகராக ஆகவேண்டும்,கென்னடி குடும்பப் பெண்ணை திருமணம் செய்துக் கொள்ளவேண்டும். இந்த மூன்று லட்சியங்களையும் நிறைவேற்றிக்கொண்டார்.

    • இவரின் மனைவி கென்னடி குடும்பத்தின் வழிவந்த மரியா ஷிரிவர். இவர்களுக்கு நான்குப் பிள்ளைகள்.

  • 1968 இல் அமெரிக்கா வந்தாலும், 1983 இல் தான் அமெரிக்க குடிஉரிமைப் பெற்றார்.

  • 1997 இல் அவருக்கு பிறக்கும்போதே இருந்த இதய வால்வு கோளாறுக்கு, இதய அறுவைச் சிகிச்சை செய்துக் கொண்டார்.
    அதுமட்டுமல்லாது தன் தாடை எலும்பை பின்னோக்கி நகர்த்த, அறுவைச் சிகிச்சை செய்துக்கொண்டார்.

  • 13 முக்கிய ஆணழகு விருதுகளைப் பெற்றுள்ளார். 1 - மேற்கு ஐரோப்பா ஆணழகன், 7 - ஒலிம்பியஸ் ஆணழகன், 5 - உலக ஆணழகன்.

  • சிறு வயதில் அவர் வீட்டில் கழிவறை, தொலைப்பேசி மற்றும் குளிர்ப்பதனப் பெட்டி கிடையாது. அவர்கள் வீட்டில் குளிர்ப் பதனப்பெட்டி வாங்கிய நாளை தன் வாழ்நாளில் ஒரு மறக்கமுடியாத நாளாகக் கருதுகிறார்.

  • அவரின் மூன்றுப் படங்கள் 'Day' என்று முடியும். End of days, 6th day, Terminator 2: Judgementday.

  • 2004 இல் ஹவாய் தீவுகளில் விடுமுறைக்காக சென்றிருந்தப்போது, கடலில் மூழ்கித் தத்தளிதுக்கொண்டிருந்த ஒரு நபரைக் காப்பற்றி நிஜவாழ்விலும் ஹீரோவானார்.

  • ப்ருஸ் வில்லிஸ், சில்வெஸ்டார் ஸ்டாலோன், டெம்மி மூர், ஆகியோரோடு சேர்ந்து Planet Hollywood என்ற சங்கிலித் தொடர் ஹோட்டல்களைத் தொடங்கினார். பின்னேர் நல்ல லாபம் இல்லை என்றுக் கூறி வெளியேறிவிட்டார்.

  • 2003 மற்றும் 2006 வருடங்களில் தொடர்ந்து கலிபோர்னியாவின் கவர்னராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

  • இவர் கலிபோர்னியாவின் கவர்னராக தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டாவது நடிகர். முதலாமவர் ரொனால்ட் ரீகன்.

  • அவரின் முதல் வெற்றிப்படமான 'Cannon the Barbarian' படத்தில்(1982) அவர் உபயோகித்த வாள், இன்றும் அவரின் கவர்னர் அலுவலகத்தை அலங்கரிக்கிறது.
    • அங்கங்கே படித்தவைகளை தொகுத்து சில விவரங்களைப் பார்த்துவிட்டோம். இனி நாம் பார்க்கவிருப்பது அவரின் புகழ்பெற்ற 'Pumping Iron' காணொளியை.

      வந்தவர்கள் நன்றாக வோட்டுப் போடுகிறார்கள்.நன்றி. பதிவைப் பற்றிய நிறைக் குறைகளைப்பற்றி ஏதாவது எழுதுங்கள். மீண்டும் சந்திப்போம்.

      [72 நிமிடங்களுக்குப் பிறகு வீடியோ நின்றுவிடும். அப்போது உங்கள் ரூட்டர் / மோடெம்- மின் இணைப்பைத் துண்டித்துவிட்டு, ஒரு நிமிடம் கழித்து இணைத்து, மீண்டும் விட்ட இடத்திலிருந்து தொடருங்கள்.]

      இப்போது மெயின் படம்......

      Monday 21 September 2009

      நேஷனல் ஜியாகரபிக்கின் அற்புதக்கணங்கள்.(வீடியோ)


      கடந்த நூறு வருடங்களைக் கடந்து, அமெரிக்காவின் வாஷிங்டன் DC நகரைத் தலைமையகமாகக் கொண்டு, விஞ்ஞானம் மற்றும் கல்வித் துறையில், லாபநோக்கமற்ற சங்கமாக இயங்கிவரும் National Geographic Society யைப்பற்றி தெரியாதவர்கள் நிறையப்பேர் இருக்க முடியாது. மிதலில் மக்களிடையே அறிவியல் மற்றும் பூகோள விழிப்புணர்வை ஏற்ப்படுத்த உருவாகப்பட்டதுத்தான் இந்த இயக்கம். மஞ்சள் நிற, நீள்சதுர கட்டத்தைப் பார்த்தவுடன் நமக்கு அது 'NG' என்றுப் புரிந்துவிடுகிறது. மக்களின் மனதில் அவ்வளவு வேரூன்றி உள்ளது. பத்திரிக்கை, தொலைகாட்சி, ஆவணப் படங்கள் தயாரிப்பது மட்டுமல்லாமல்,பல்வேறு அறிவியல், பூகோள ஆராய்ச்சிகளுக்கு நிதி உதவி அளிப்பதிலும் முன்னோடியாகத் திகழ்கிறது. இந்த நிறுவனம் நிர்வகிக்கும் அருங்காட்சியகங்களும், கல்வி மற்றும் அறிவியல் சார்ந்த பொருட்களை விற்பனைச் செய்யும் கடைகளும் உலகம் முழுதும் மிகவும் பிரிசித்தம்.
      இந்த நிறுவனத்தின் புகைப்படங்கள் மிகவும் புகழ்ப்பெற்றவை. உலகின் தலைச் சிறந்த புகைப்படக் கலைஞர்களும் , ஒளிப்பதிவாளர்களும் இந்த நிறுவனத்திற்காகப் பணிப்புரிகிறார்கள். தற்போது நாம் பார்க்கப்போவது, அவர்கள் எடுத்த காணொளிகளில் மிகச் சிறந்த காட்சிகளை அவர்களே தொகுத்து, ஒரு முழு படமாகத் தந்திருக்கிறார்கள். ஆகவே, fasten your seat belts .... hold on tight..... & get ready for the ride......!

      [ கண்டிப்பாக 72 நிமிடங்கள் கழித்து வீடியோ நின்றுவிடும். அப்போது உங்கள் ரூட்டர் / மோடெம் - மின் இணைப்பை ஒரு நிமிடம் துண்டித்துவிட்டு மறுபடியும் விட்ட இடத்தில் இருந்துத் தொடருங்கள். ]


      புனித மெக்கா: ஒரு பார்வை.(வீடியோ)


      மெக்கா! புனித நகரம். முகமது நபி அவர்களின் பிறப்பிடம். இறைவனால் மிகவும் நேசிக்கப்படும் இடம். இறை தூதர் இப்ராகிம் அல்-கலீல் அவர்களால் உருவாக்கப்பட்ட நகரம். இஸ்லாமியர்களின் வாழ்வில் முக்கியப் பங்காற்றும் தலம். அவர்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், மெக்காவின் 'காபா' இருக்கும் திசையை நோக்கி, தினமும் ஐந்து முறை பிராதிக்கவேண்டும். அந்த வணக்கத்துக்குரிய காபா - 'இறைவனின் இல்லம்', ஆபிரகாமின் புதல்வர், இஸ்மாயில் அவர்களால் கட்டப்பட்டு, தங்க சரிகைகளால் வேயப்பட்ட கறுப்புத்துணியால் போர்த்தப்பட்டுள்ளது. இந்த மசூதிக்குள் மாத்திரம் அல்ல மெக்கா நகருக்குள் இஸ்லாமியர்கள் மாத்திரம் அனுமதிக்கப்படுவார்கள். மெக்காவுக்கு ஹஜ் பயணம் மேற்கொள்ளும் யாத்திரிகர்கள் காபாவை ஏழுமுறை சுற்றி வருவர். அங்குள்ள மூலைகல்லான கருப்புக்கல்லை தொடவோ முத்தமிடவோ செய்தால், அது அவர்களில் பெரும் பேறாக கருதப்படுகிறது. மெக்காவிற்கு செல்லும் புனித யாத்திரை இஸ்லாமியரின் ஐந்து நம்பிக்கைத் தூண்களில் ஒன்றாகும். அங்குள்ள ஜம் ஜம் என்ற கிணற்றில் உள்ள நீர் ஆசிர்வதிக்கப்பட்ட புனித நீராகக் கருதப்படுகிறது. அதற்க்கு நோய்களை குணமாக்கும் சக்தியும் இருப்பதாக நம்பப்படுகிறது.

      மெக்கா நகர் 2008 ஆம் வருடக் கணக்கின் படி 1.7 மில்லியன் மக்கள்தொகைக் கொண்டதாக இருந்தது. இது ஜெட்டா நகரில் இருந்து 73 கி மி, தொலைவில் அமைந்துள்ளது. இது சவூதி அரேபிய நாத்தி அரசாங்கத்தின் கீழ், மெக்கா நகராட்சியின் மேயரால் (அமின்) நிர்வாகிக்கப்படுகிறது.

      இந்த நகரைப் பற்றி முழுமையாக அறிந்துக்கொள்ள நேஷனல் ஜியாகரபி நிறுவனம் படைத்துள்ள 'Inside Mecca' என்ற அருமையான ஆவணப்படம் உறுதுணையாக இருக்கும். பார்த்துப் பரவசமடையுங்கள். நன்றி. அனைவருக்கும் புனித ரம்ஜான் வாழ்த்துக்கள்!