Thursday 26 November 2009

மும்பை பயங்கரம்: எத்தனை முறைப் பாடம் படிப்போம்? (வீடியோ)






சென்ற வருடம், நவம்பர் 26 ஆம் தேதி, இந்தியாவே துடித்துக்கொண்டிருந்தது! இந்தியா சந்தித்த மிக மோசமான தருணங்களில் இதுவும் ஒன்று. இந்தியாவின் மீது தீராத வெறிக்கொண்ட பகைவர்களால் மிகவும் பயங்கரமாக அரங்கேற்றப்பட்ட கொடிய கொலைவெறித் தாக்குதல் இது. குறைந்தது 173 உயிர்களை பலிக்கொண்ட இந்த காடுமிரண்டித்தனத்தை, நம்மில் நிறையப் பேருக்கு தெளிவாக எடுத்துச் சொல்ல நம்ம நாட்டில் சரியான ஆட்கள் இல்லை. ஆனால் இங்கிலாந்து நாட்டின் துணிவுமிக்க தொலைகாட்சி நிறுவனமான 'சேனல் 4' தொலைகாட்சி, சென்ற ஜூன் மாதம் 29 ஆம் தேதி ஒளிப்பரப்பிய ' Terror in Mumbai ' என்ற ஆவணப்படம் உலகையே உலுக்கியது. பார்த்தவர்களை நெஞ்சம் பதற வைத்தது. முன்பே திரைக்கதை எழுதி படமாக்கப்படும் திகில் படங்கள் கூட இப்படி நம்மை உறையவைக்குமா என்றுத் தெரியவில்லை! எங்கெங்கோ கிடைத்த பல உண்மை வீடியோக்களைக் கொண்டு ஒரு முழுப் படமாக மாற்றி இருக்கும், பல விருதுகளைப் பெற்ற டான் ரீட் அவர்கள் தயாரித்து இயக்கிய சிறந்தக் காணொளியாகும். இது மீண்டும் இன்றும் நாளையும் அதேத் தொலைக்காட்சியில் மறு ஒளிப்பரப்பப்படுகிறது.


இந்த காணொளியில், இந்தியாவில் நுழைந்த 10 தீவிரவாதிகள்,மும்பை நகரில் கால் வைத்ததிலிருந்து,வெறியாட்டம் ஆடி முடித்தவரையிலான ஒவ்வொரு மணித்துளிகளையும் அணுவணுவாக விவரிக்கிறது. தற்போது காவல்துறையிடம் சிக்கி, தன் இஷ்டத்திற்கு 'அது வேண்டும், இதுவேண்டும்' என்று இன்னும் உயிரோடு பேசிக்கொண்டிருக்கும் காசாப் என்ற விஷ ஜந்துவிடம் காவலர் நடத்திய விசாரணையும், அந்தக் கொடியவர்கள் , தங்கள் நாட்டிலுள்ள மனிதநேயம் மறந்த, தன் மக்கள்மீதே தாக்குதல் நடத்தும் தீவிரவாத தீயசக்திகளோடு பேசிய தொலைப்பேசி பேச்சுக்களும் இணைக்கப்பட்டுள்ளன. அந்தத் தாக்குதலில் படுகாயமடைந்து உயிர்பிழைத்த காவலர் மற்றும் பொதுமக்களின் பேட்டிகளையும் மனதுருக விவரிக்கிறது.

(ஆகவே இளகிய மனது கொண்டவர்கள் இதைப் பார்ப்பதை தவிர்க்கவும்.)

இந்த உலகம், மதம் என்ற மதம்பிடித்த யானையால் சின்னாபின்னமாகப்படுகிறது. வருங்கால சந்ததியரான நம் குழந்தைகள் மனதிலும் இந்த வன்மம் விதைக்கப்படுகிறது. இது எல்லா மதத்தினருக்கும் பொருந்தும். மதமாச்சர்யங்களை மறந்து, என்று அன்போடும் பண்போடும் வாழ விழைகிறோமோ அன்றுதான் இந்த உலகம் ஒரு மகிழ்ச்சியான சோலையாக இருக்கும். "தன்னைப்போல் பிறனையும் யோசி & நேசி " என்று எல்லா மதங்களும் கூறுகின்றன. ஆனால் அதை மட்டும் விட்டுவிட்டு, அதில் சொல்லியுள்ள கெட்ட விஷயங்களையே எல்லோரும் பின்பற்றுகின்றனர் என்பது விந்தையும், வேதனையுமாக உள்ளது.

இந்தப் பதிவின் மூலமாக இந்தத் தாக்குதலில் உயிர்நீத்த அப்பாவி பொதுமக்களுக்கும், அவர்களின்பால் தங்கள் இன்னுய்ரை தியாகம் செய்த காவல் துறை கடமை வீரர்களுக்கும் நம் அஞ்சலியை செலுத்துவோம். வாழ்க இந்தியா! வெல்க மனிதநேயம்.!!





நிஜக் கதாநாயகர்கள்!

Wednesday 25 November 2009

மும்பைத் தாக்குதல் முதலாம் ஆண்டு.(காணொளி)



சென்ற வருடம், நவம்பர் 26 ஆம் தேதி, இந்தியாவே துடித்துக்கொண்டிருந்தது! இந்தியா சந்தித்த மிக மோசமான தருணங்களில் இதுவும் ஒன்று. இந்தியாவின் மீது தீராத வெறிக்கொண்ட பகைவர்களால் மிகவும் பயங்கரமாக அரங்கேற்றப்பட்ட கொடிய கொலைவெறித் தாக்குதல் இது. குறைந்தது 173  உயிர்களை பலிக்கொண்ட இந்த காடுமிரண்டித்தனத்தை,   நம்மில் நிறையப் பேருக்கு  தெளிவாக எடுத்துச் சொல்ல நம்ம நாட்டில் சரியான ஆட்கள் இல்லை. ஆனால் இங்கிலாந்து நாட்டின் துணிவுமிக்க தொலைகாட்சி நிறுவனமான 'சேனல் 4' தொலைகாட்சி, சென்ற ஜூன் மாதம் 29 ஆம் தேதி ஒளிப்பரப்பிய ' Terror in Mumbai ' என்ற ஆவணப்படம் உலகையே உலுக்கியது.  பார்த்தவர்களை நெஞ்சம் பதற வைத்தது.  முன்பே திரைக்கதை எழுதி படமாக்கப்படும் திகில் படங்கள் கூட இப்படி நம்மை உறையவைக்குமா என்றுத் தெரியவில்லை! எங்கெங்கோ கிடைத்த பல உண்மை  வீடியோக்களைக் கொண்டு ஒரு முழுப் படமாக மாற்றி இருக்கும், பல விருதுகளைப் பெற்ற டான் ரீட் அவர்கள் தயாரித்து இயக்கிய சிறந்தக் காணொளியாகும். இது மீண்டும் இன்றும் நாளையும் அதேத் தொலைக்காட்சியில்  மறு ஒளிப்பரப்பப்படுகிறது.


இந்த காணொளியில், இந்தியாவில் நுழைந்த 10 தீவிரவாதிகள்,மும்பை நகரில் கால் வைத்ததிலிருந்து,வெறியாட்டம் ஆடி முடித்தவரையிலான ஒவ்வொரு மணித்துளிகளையும் அணுவணுவாக விவரிக்கிறது. தற்போது காவல்துறையிடம் சிக்கி, தன் இஷ்டத்திற்கு 'அது வேண்டும், இதுவேண்டும்' என்று இன்னும் உயிரோடு பேசிக்கொண்டிருக்கும் காசாப் என்ற விஷ ஜந்துவிடம் காவலர் நடத்திய விசாரணையும்,  அந்தக் கொடியவர்கள் , தங்கள் நாட்டிலுள்ள மனிதநேயம் மறந்த,  தன் மக்கள்மீதே தாக்குதல்  நடத்தும்  தீவிரவாத தீயசக்திகளோடு பேசிய தொலைப்பேசி பேச்சுக்களும் இணைக்கப்பட்டுள்ளன.     அந்தத் தாக்குதலில் படுகாயமடைந்து உயிர்பிழைத்த காவலர் மற்றும் பொதுமக்களின் பேட்டிகளையும் மனதுருக விவரிக்கிறது.
(ஆகவே இளகிய மனது கொண்டவர்கள் இதைப் பார்ப்பதை தவிர்க்கவும்.) 


இந்த உலகம், மதம் என்ற மதம்பிடித்த யானையால் சின்னாபின்னமாகப்படுகிறது. வருங்கால சந்ததியரான நம் குழந்தைகள் மனதிலும் இந்த வன்மம் விதைக்கப்படுகிறது. இது எல்லா மதத்தினருக்கும் பொருந்தும். மதமாச்சர்யங்களை மறந்து, என்று அன்போடும் பண்போடும் வாழ விழைகிறோமோ அன்றுதான் இந்த உலகம் ஒரு மகிழ்ச்சியான சோலையாக இருக்கும். "தன்னைப்போல் பிறனையும் யோசி & நேசி " என்று எல்லா மதங்களும் கூறுகின்றன. ஆனால் அதை மட்டும் விட்டுவிட்டு, அதில் சொல்லியுள்ள கெட்ட விஷயங்களையே எல்லோரும் பின்பற்றுகின்றனர் என்பது விந்தையும், வேதனையுமாக உள்ளது. 

இந்தப் பதிவின் மூலமாக இந்தத் தாக்குதலில் உயிர்நீத்த அப்பாவி பொதுமக்களுக்கும், அவர்களின்பால் தங்கள் இன்னுய்ரை தியாகம் செய்த காவல் துறை கடமை வீரர்களுக்கும் நம் அஞ்சலியை செலுத்துவோம். வாழ்க இந்தியா! வெல்க மனிதநேயம்.!!








Monday 16 November 2009

கங்கை நதியின் இன்றைய கதி!




இந்தியப் பிரதமர் திரு. மன்மோகன் சிங், 2008 நவம்பர் 4 ஆம் தேதி, கங்கை நதியை இந்தியாவின் தேசிய நதியாக அறிவித்தார்! அப்படி அறிவிக்கவேண்டி என்ன நிர்பந்தம்? கங்கையை விட்டால் வேறு  எந்த ஆறுக்கு அந்தப் பெருமை வரும்?  இந்த நதி பலகோடி மக்களின் நம்பிக்கையில், வாழ்க்கையில் பின்னிப்பிணைந்தது அல்லவா? இந்தியாவின் பெரும்பாலான மக்களால் மிகவும் புனிதமாகவும், கங்கைத்தாய் என்றும் கங்காதேவி என்றும் கடவுளாகவே கருதப்பட்டு வணங்கப்படும் இந்த மாபெரும் நதிக்கு தற்போது நேர்ந்திருக்கும் வருந்தக்கூடிய நிலையே அவரின் அறிவிப்புக்கு முதல் காரணம். அப்படி அறிவித்தது மட்டுமல்லாமல், மாசுப்பட்டு இருக்கும் அந்த புண்ணிய நதியை காப்பாற்ற பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.


இமய மலையில் இருந்து நிஜமாகவே மிகவும் புனிதமாக வெளிப்பட்டு, மனிதனின் பேராசையாலும், மூடநம்பிக்கைகளாலும், அரசாங்கத்தின் மெத்தத்தனத்தினாலும் மாசுப்பட்டு  கலங்கி நிற்கும் அந்த கங்கையின் கரைகளிலே ஒரு பயணம் போவோமா? நேஷனல் ஜியாகரபி நிறுவனத்தின் ' Rivers and Life ' என்ற தலைப்பில் வெளிவந்த இந்தியாவின் கங்கை, எகிப்தின் நைல் , சீனாவின் யாங்சி ஆறுகளைப்பற்றிய ஆவணப் படங்களில், (மற்ற இரு நதிகளைப் பற்றிய வீடியோ, சுற்றுப்புற  மாசு பற்றியது இல்லை!) நமது நாட்டின் கங்கையைப் பற்றிய வீடியோவை உங்களுடன்  பகிர்ந்துக் கொள்ளுகிறேன்.  பார்த்து விட்டு நீங்களும் வருந்துங்கள்.




இதில் ஒரு சின்ன ஆறுதல் என்னவென்றால், உலகின் 'மிகவும் கப்படித்த' ஆறு என்ற பெருமையை தற்போது  தட்டிச் செல்வது, இந்தோனேசியாவின் சிட்டாரம்  என்ற ஆறு!
(படம்) . ஆனால் அங்கு பிணங்கள் மிதப்பதாகத் தெரியவில்லை. இனி வருங்காலத்தில் விட்ட அந்த முதல் இடத்தை பிடித்துவிடுவோம் என்று நம்பிக்கையோடு  காத்திருப்போம்!

Friday 13 November 2009

Michael Jakson's 'Captain EO'.



நம்மில் பலருக்கு தெரியாது, மைகேல் ஜாக்சன், ஒரு 3D படத்தில் நடித்துள்ளார் என்று! அந்தப் படத்தின் பெயர் CAPTAIN EO . 17 நிமிடங்களே ஓடக்கூடிய இந்தப் படம் டிஸ்னி பார்க்குகளில் மட்டும் பிரத்தியேகமாக காண்பிக்கப்பட வேண்டி,  'ஸ்டார் வார்ஸ்' புகழ் ஜார்ஜ் லுகாஸ் அவர்களால் தயாரிக்கப்பட்டு, 'காட் ஃபாதர்' புகழ் பிரான்சிஸ் போர்ட் கப்போலா அவர்களால் இயக்கப்பட்டது. முதலில் ஸ்டீபன் ஸ்பில்பேர்க் அவர்களால்தான் இயக்கப்பட இருந்தது. ஆனால் அவர் அந்த நாட்களில் பிஸியாக இருந்ததால் அந்த வாய்ப்பு கப்போலாவிற்கு சென்றது.



1986 ஆம் வருடக் கணக்கின்படி ஒரு 17 நிமிடப் படத்திற்கு $30 மில்லியன் டாலர்கள் செலவழிக்கப்பட்டது மிகப்பெரும் தொகையாகக் கருதப்பட்டது! அதாவது ஒரு நிமிடப் படத்திற்கு $1.76 மில்லியன் டாலர் செலவிடப்பட்டு உள்ளது!
இந்தப் படத்தில் இரண்டுப் பாடல்கள் உள்ளன. இசை ஜேம்ஸ் ஹார்னர் (Die Hard, Aliens, Braveheart, Titanic,...). 'Another part of me' என்றப் பாடல், சில காலத்திற்கு பின், ஜாக்சனின் புகழ்பெற்ற 'BAD' ஆல்பத்தில் இன்னும் மெருகூட்டப்பட்டு சேர்க்கப்பட்டது. இன்னொரு பாடலான ' We Are Hear to Change the World', அவரின் 'Ultimate Collection' ஆல்பத்தில் வந்துள்ளது.




வேற்று கிரகத்தில் நடப்பதுப்போல் உள்ள காமிக் கதையை மூலமாகக் கொண்டு கதைக்களம் அமைந்துள்ளது. இதில் கதாநாயகன் கேப்டன் EO வாக மைகேல் ஜாக்சனும், நாயகி/வில்லியாக அஞ்சலிகா ஹட்சனும் நடித்துள்ளார்கள். நாகனுடன் கூட வரும் பாத்திரங்களான ஃபஸ் பால், இரட்டைத்தலை இடி & ஒடி, மேஜர்  டெமோ என்கிற இயந்திர பாதுகாப்பு அதிகாரி, அதைப்போலவே சிறிய டெமோ, யானைப் போன்ற உருவமுடைய ஹூடர் போன்ற பாத்திரங்கள் மறக்கமுடியாதவை.





ஜாக்சனின் மரணத்திற்குப்பின் வால்ட் டிஸ்னி நிறுவனத்தார், இப்படத்தை மீண்டும் வெளியிட திட்டமிட்டுள்ளாராம். அப்படி இருக்கும் படசத்தில், அவரின் ரசிகர்கள் இப்படத்தை  மீண்டும் ஒருமுறை அட்டகாசமான 3D தொழில்நுட்பத்தில் கண்டு மகிழ்வார்கள் என்பதில் சந்தேகமில்லை!  

நாமும்  அதை ஒருமுறைப் பார்ப்போமா?

Captain EO

sd | MySpace Video

Thursday 12 November 2009

CHILDREN OF GOD.



நேபாளம் நாட்டின் தலை நகரம் காட்மண்டு. அதன் நடுவே ஓடும் பாக்மதி நதி. அதன் கரையில் இருக்கும் பசுபதிநாத் கோவில். மிகவும் புனிதமாகக் கருதப்படும் இடம். இது ஒரு சிவன் கோவில். ஐந்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்துக்களுக்கும் பௌத்தர்களுக்கும் மிகவும் முக்கியமான தளங்களில் இதுவும் ஒன்று. இங்கு என்ன விசேஷமென்றால், இறந்துப் போனவர்களின் உடலை இந்த பாக்மதி நதியில் மூழ்கவைத்து, பின்பு எரித்தால் இறந்தவருக்கு சொர்க்கம் நிச்சயம் என்று நம்பப்படுகிறது. அதனால் இந்த இடம் எப்போதும், நம்ப நாட்டின் காசி மற்றும் வாரணாசி கோவில்களைப்போல் எப்போதும் பிசியாகவே இருக்கும்.

ஆனால் இப்போது நாம் பார்க்கப் போவது இவைகளைப்பற்றி இல்லை! இந்த பாக்மதி நதிக்கரையில் வசிக்கும் நிராதரவான, தன் போக்கில் திரியும் சிறுவர்களைப் பற்றியது. அவர்கள் வாழுவது இறுதிச்சடங்கு செய்யவரும் பக்தர்களின் பூஜைக் கழிவுகள்  மற்றும் பிண சாம்பல்களின் கழிவுகளில் கிடைப்பவற்றை கொண்டு எப்படி ஜீவிகிறார்கள் என்பதுப்பற்றி மனித நேயத்தோடு எடுக்கப்பட்ட ஒரு
 காணொளி. இப்படத்தில் நாம் பின்தொடரப்போவது அலேஷ் என்ற சிறுவனையும் அவனின் தம்பி மற்றும் தங்கையை. அவனின் பிச்சை எடுக்கும்,  குடிக்கார தாயையும் சந்திக்க இருக்கிறோம். இவர்களின் வாழ்க்கை சொர்கத்துக்கும் நரகத்துக்கும் நடுவே ஊசலாடுவதைக் காணமுடியும். இவ்வளவு இருந்தும் அவர்கள் எவளவு மகிழ்சியாக இருக்கிறார்கள் என்பதைப் பார்க்கும் போது வியப்பாக இருக்கிறது! ஆனால்  இப்படியும் சிறுப் பிள்ளைகள்  வாழுகிறார்கள் என்பதைப் பார்க்கும்போது நம் நெஞ்சு கனக்கிறது. இந்தப் படம் முடிந்ததும், மனிதநேயம் உள்ளவர்கள் கண்டிப்பாக அதன் தாக்கத்தை  உணருவார்கள்.

இந்தப் காணொளியை இயக்கியவர் தென்  கொரியாவைச் சேர்ந்த Yi Seung-jun என்பவர். (யார் யாருக்கு எப்படி முடியுமோ அப்படி வாசித்துக் கொள்ளவும்!). சிறந்த ஆவணப் படத்திற்கான விருதை இரண்டுமுறைப் பெற்றது. அதற்கு தகுதியானதும் கூட என்று பார்பவர்களுக்கு புரியும்.

ஆகவே நண்பர்களே, இதோ அந்த படம் உங்களின் பார்வைக்கு..... Children of God.

[ 72 நிமிடங்களுக்குப் பிறகு வீடியோ நின்றுவிடும். அப்போது உங்கள் ரூட்டர் / மோடெம்- மின் இணைப்பைத் துண்டித்துவிட்டு, ஒரு நிமிடம் கழித்து இணைத்து, மீண்டும் விட்ட இடத்திலிருந்து தொடருங்கள்.]


 


இந்த வாரம் நேபாள வாரம்  போலுள்ளது! நேற்றுத்தான் நேபாளம் குறித்த இரண்டு பதிவுகளைப் பார்த்தேன்.தற்போது நான்!  இதற்கு அடுத்து, உலகையே உலுக்கிய 'நேபாள அரசக் குடும்பப்  படுகொலை' பற்றிய வீடியோப் பதிவு. என்ன பார்க்கலாமா?

Monday 9 November 2009

மைகேல் ஜாக்சனின் கதை(கள்) [வீடியோ(க்கள்)]


ஆமாம்! மைகேல் ஜாக்சனின் கதைகள்தான். அவர் இறந்ததில் இருந்து, இன்றுவரை எத்தனை விதங்களில் வீடியோக்கள் தயாரிக்கப்பட்டனவோ தெரியவில்லை. நான் இதுவரை நான்கு வீடியோக்களை பார்த்து இருக்கிறேன். அவர் இறப்பதற்கு முன் அவரின் மீதான சர்ச்சைகளைப் பற்றிய வீடியோக்களை நாம் ஏற்கனவேப் பார்த்துள்ளோம்.  இப்போது புதிதாக வெளிவந்துள்ள அந்தக் காணொளிகளை
காண்போமா? எல்லாமே முழுநீள வீடியோக்கள். ஆகவே நேரம் ஒதுக்கி முழுமையாகப் பார்க்கவும்.

[ 72 நிமிடங்களுக்குப் பிறகு வீடியோ நின்றுவிடும். அப்போது உங்கள் ரூட்டர் / மோடெம்- மின் இணைப்பைத் துண்டித்துவிட்டு, ஒரு நிமிடம் கழித்து இணைத்து, மீண்டும் விட்ட இடத்திலிருந்து தொடருங்கள்.]


MICHAEL JAKSON: LIFE OF A SUPER STAR



THE TRUE STORY OF MICHAEL JAKSON




MICHAEL JAKSON UNMASKED




THE  MICHAEL JAKSON - STORY 1958 - 2009



இந்தத் தொகுப்பில் கடைசியாக நாம் பார்க்கப்போவது , தன் மாளிகையான நெவர் லேண்டில், தானே முன் வந்து, மார்டின் பஷீர் என்ற BBC , ITV மற்றும் ABC தொலைகாட்சி நிறுவனங்களில்  வேலை செய்தவனிடம்,(ஏக வசனத்தில் அழைப்பதற்கு வருந்தவில்லை) அப்போதைய களங்கங்களிலிருந்து தன்னை, குற்றமற்றவன் என்று நிரூபிக்க, அவனை மிகவும் நம்பி தன்னையே  ஒப்படைத்தார். ஆனால் அவனோ, அதற்கு மாறாக, அவர் பேட்டியில் கூறியதைத் திரித்து, நம்பிக்கை துரோகம் செய்தான் அந்த மார்டின் பஷீர்.  அந்த தொலைகாட்சி தொடர் வந்த இரவே அவர் இறந்துவிட்டார் என்றேக் கூறவேண்டும். மறுபடியும் திருத்தப்படவேமுடியாத அப்படி ஒரு பச்சைத் துரோகம் இழைக்கப்பட்டுவிட்டது... இதுப்பற்றி Topix வலைத்தளத்தில் ஜாக்சனின் ரசிகர்களின் கருத்துக்களைக் காண இங்கே.
இவ்வளவையும் செய்துவிட்டு அவரின் மரணத்துக்குப்பின் பஷிர்  கூறியது இதுதான்,

என்ன சொல்லி என்ன பயன்? அருமையான ஒரு மனித நேயம்மிக்க மகாக் கலைஞனை இழந்துவிட்டோம். ஈடு செய்யவே முடியாத இழப்பு.

சரி, அந்த வீடியோவைப் பார்க்காதவர்களுக்காக, இதோ....

LIVING WITH MICHAEL JACKSON



என்ன நண்பர்களே, எல்லாவற்றையும் பார்த்தாகிவிட்டதா?
சரி , இப்போது இதே பஷிரின் கயமை வெளிப்பட ஜாக்சனின் சொந்த கேமராமேனால் கூடவே எடுக்கப்பட்ட வீடியோக்களைக் காண...


வீடியோ 1, வீடியோ 2, வீடியோ 3, வீடியோ 4, வீடியோ 5, வீடியோ 6,

வீடியோ 7, வீடியோ 8, வீடியோ 9.

இப்போது ' We Are the World ' என்ற மைகேல் ஜாக்சனால்( கூட எழுதியவர் லியோனெல் ரிச்சி) எழுதிப் பாடவும் செய்த புகழ்ப்பெற்ற பாடலைப் பார்ப்போமா? இந்தப் பாடலின் பின்னணிக் கதை இதுதான்.
1984-1985 ஆம் ஆண்டுகளில், ஆப்பிரிக்காவில், குறிப்பாக எத்தியோப்பாவில் மிகக்கடுமையான பஞ்சம் தலைவிரித்தாடியது. ஏறக்குறைய  ஒரு மில்லியன் மக்கள் உணவின்றி மாண்டனர். அப்போது ஜமைக்கா நாட்டில் பிறந்து, அமேரிக்காவில் வாழ்ந்துக் கொண்டிருந்த, புகழ்ப் பெற்ற கறுப்பினப் பாடகரான ஹேரி பெலாஃபாண்ட் ( Beetlejuice படத்தில் வரும்  அவரின் பிரபல  பாடலான Banana Boat  பாடலைக் கேட்க) அவர்களின் முதல் முயற்சியால் உருவானப் பாடல் இது. 21 முக்கியப் பாடகர்களும், 22 கோரஸ் பாடகர்களாலும் பாடப்பட்டது. இந்த கோரஸில் ஜாக்சனின் சகோதர , சகோதரிகளும், மற்றும் ஹேரி அவர்களும் அடங்குவர்.
நடத்துனர், ஜாக்சனின் முக்கிய, புகழ்ப்பெற்றஆல்பங்களைத் தயாரித்த க்யுன்சி ஜோன்ஸ்.(மேலும் விவரங்களைக் காண)

இதோ அந்தப் பாடல்....


சும்மா ஏதாவது எழுதிவிட்டுப் போங்களேன்!