Tuesday 23 June 2009

The Killing Fields - உலகின் தலை சிறந்த திரைப்படங்கள்.


வியட்னாம் போர் முடிந்து, மக்கள் தங்களை ஆசுவாசப்படுத்திக்கொள்ள நினைத்த நேரம், 1975 முதல் 1979 வரை, மீண்டும் உலக மக்களை கவலை கொள்ளச்செய்த நாடு கம்போடியா!
' கெமர் ரூஷ்', என்று அழைக்கப்பட்ட, வலதுசாரி கம்யூனிஸ்ட் சித்தாந்த, தீவிரவாத கும்பல், கம்போடியாவை தன் கட்டுக்குள் கொண்டு வந்தது. அதன் தலைவன், ' போல் பாட்' என்ற படித்த, மனித மிருகம். பிரான்சு நாட்டில் பட்டப்படிப்பு படித்த அவன், திரும்பி வந்தது, தீவிர கம்யூனிஸ்ட் சித்தாதங்களோடுத்தான். இவர்களுக்கு நன்கு படித்தவர்கள், நகரங்களில் வசிப்பவர்கள், வெளிநாட்டு மோகம் அல்லது தாக்கம் உள்ளவர்களைக்கண்டால் பிடிக்காது. கிராமங்களில் வசிக்கும் விவசாயிகள் தான் நாட்டை தாங்கி நிறுத்தும் தூண்கள் என்று, கண்மூடித்தனமாக நம்பினார்கள். மேலும் வயதான, நடுத்தர வயதுள்ள பெற்றோர்கள் எல்லாம், மேற்கத்திய ஏகாதிப்பத்திய எண்ணங்களால் பாதிக்கப்பட்டவர்கள் என்று கருதப்பட்டனர். ஆகவே அவர்கள் எல்லாம் கண்மூடித்தனமாக சித்தரவதை செய்யப்பட்டு, கிராமங்களுக்கு இழுத்துச்செல்லப்பட்டு, வயல்களில் கடுமையாக உழைக்கத் தள்ளப்பட்டனர்.
முரண்டு பிடித்தவர்கள் ஈவு இரக்கம் இல்லாமல் கொன்று குவிக்கப்பட்டனர்.
இது இல்லாமல், பட்டினி, நோய் போன்றவற்றால் வேறு சாவை எதிர்க்கொண்டார்கள். " நீ உயிருடன் இருப்பதால் எனக்கு லாபம் எதுவும் இல்லை, நீ செத்துப்போனால் நஷ்டம் எதுவும் இல்லை!" இப்படிப்பட்ட கொள்கையை கொண்ட கொடுங்கோலரிடம் ஆட்சி இருந்தால் மக்களின் நிலையை சொல்லி புரியவைக்க முடியாது. இவர்கள் கொன்று குவித்த, தன் சொந்த நாட்டு மக்களின் எண்ணிக்கை, உலகிற்கு தெரிந்த வரையில் 1.7 மில்லியன். இது மொத்த மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பகுதி. அப்படி கொன்ற உடல்களை வீசிய , புதைத்த இடங்களைத்தான், ' கம்போடியாவின் கொலைக்களங்கள்' என்று ( The Killing Fields ) என்று அழைத்தார் ஒருவர். அவர் பெயர் ' டித் பிரான் ' ( Dith Pran ), ஒரு கம்போடிய பத்திரிக்கையாளார். படித்தவரான அவர் அந்த கெமர் ரூஷ் கொலைக்காரர்களிடம் சிக்கி, சின்னாபின்னமாகி கொடுமையான கொலைக் களங்களிலிருந்து எப்படித்தப்பிது வருகிறார் என்பதை தத்ரூபமாக சித்தரிக்கும் சித்திரம் தான் 'The Killing Fields '.
அமெரிக்காவின் ' Newyork Times ' பத்திரிகையின் நிருபரான ' சிட்னி ஷேன்பேர்க் ' என்பவருக்கு உதவி செய்ய நியமிக்கப்படுகிறார் டித் பிரான். இவர்களுக்கிடையில் ஏற்படும் கவித்துவமான நட்பும், கெமர் ரூஷ் ஆட்சியின் கொடுரமும், அவர்களிடம் சிக்கிய பிரான் எப்படி தப்பிக்கிறார் என்பதுவும் அருமையாக படமாக்கப்பட்டுள்ளது. பிரானாக Dr. Haing S Ngor நடித்துள்ளார் என்பதை விட வாழ்ந்துள்ளார் எனபது சாலப்பொருந்தும். ஏன் என்றால் அவர் தன் உண்மை வாழ்கையிலும் படத்தில் உள்ள அனைத்து கஷ்டங்களையும் அனுபவித்தவர். நிஜ வாழ்க்கையில் மருத்துவரான அவர், இப்படத்தில் நடித்ததற்காக 1985 ஆம் வருடத்திற்கான சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருதை பெற்றார். மேலும் அந்த வருடத்தின் சிறந்த திரைக்கதை மற்றும் சிறந்த ஒளிப்பதிவிற்கான ஆஸ்கர் விருதுகளையும் தட்டிச் சென்றது. முழு படத்தையும் பார்க்கும்போது, ஒரு இடத்திலாவது கண் கலங்காதவர்களே இருக்க முடியாது.
இப்படத்தில் நாயகன் சிட்னியும், ( Sam Waterson, ஆஸ்கர் சிறந்த நடிகருக்கான விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர், வரும்காலத்தில் நம்மவூர் Sam Andrason கூட அவ்வாறு செல்வார் என்று நம்புவோமாக!) பிரானும் சந்திக்கும் இடத்தில் வரும், 'John Lennon' பாடிய Imagine பாடலின் பின்னணியில் ' என்னை மன்னிப்பாயா,பிரான்? என்று சிட்னி கேட்க, பிரான் புன்னகையுடான்,' மன்னிப்பதற்கு எதுவுமில்லை, சிட்னி, மன்னிப்பதற்கு எதுவுமில்லை ' என்று கூறி இருவரும் தழுவிக்கொள்ளும் காட்சி, மனதை நெகிழ வைக்கும் மிகவும் புகழ்பெற்ற காட்சி.
பார்கதவர்கள் எங்காவது தேடிப்பிடித்தது பாருங்கள். பார்த்து விட்டு உங்களுக்கு 'எதைப்பற்றி' ஞாபகம் வந்தது என்று என்னக்கும் சொல்லுங்கள்.

இந்த சாம்பிள் வீடியோக்களையும் பாருங்கள்.


























வருகைக்கு நன்றி. வோட்டும் கருதும் இடுவது உங்கள் உரிமை.

Tuesday 16 June 2009

The Day of the Jackal - உலகின் தலைச் சிறந்தப் படங்கள்.


1995, நவம்பர் 4 ஆம் தேதி, இஸ்ரேலிய பிரதமர் இசாக் ராபின், டெல் அவிவ் நகரில், இகல் அமீர், என்ற இஸ்ரேலிய வாலிபனால் சுட்டுக்கொல்லப்பட்டார். கொலைகாரனின் உடைமைகளை ஆராய்ந்த போது, எபிரேய மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட ஒரு புத்தகம் கிடைதத்து. அது பிரெட்ரிக் போர்சித் எழுதிய ' The day of the Jackal' என்ற நாவல். போர்சித் 1970 ஆம் வருடம், ரியுடேர்ஸ் செய்தி நிறுவனத்தின் நிருபராக பிரான்சில் பணியாற்றிய போது, தான் நேரில் கண்ட, சேகரித்த தகவல்களை கொண்டு, இந்த பிரசித்தி பெற்ற த்ரில் நாவலை படைத்தார். இந்த நாவலின் பின்னணி, 1962 இல் அல்ஜீரியா நாட்டின் விடுதலை போராட்டத்தின் போது, பிரான்சில் இருந்த OAS (Organization of the Secret Army) என்ற வலதுசாரி போராளி இயக்கம், அப்போதைய பிரெஞ்சு பிரதமரான 'சார்லஸ் தி கௌல்லே'வை கொல்ல நியமித்த பிரிட்டிஷ் 'கொலைஞ்சனான', நம் கதாநாயகன் 'ஜகல்- (Jakal ) என்ற கில்லாடியின் கொலை முயற்சியை பற்றிய கதை. இது 1972 ஆம் வருடத்திற்கான எட்கர் விருதினை ( சிறந்த மர்மக்கதை ) பெற்றது. மேலும் இன்றுவரை உலகின் புகழ்பெற்ற சிறந்த நாவல்கள் வரிசையில் தன் இடத்தை தக்கவைத்து உள்ளது. இந்த நாவல் 1973 ஆம் வருடம் பிரெட் ஜின்னேமன் (Fred Zinnemann)ஆல் திரைப்படமாக உருவாக்கப்பட்டது. அதில் கதாநாயகனாக எட்வர்ட் பாக்ஸ் (Edward Fox) நடித்துள்ளார் என்பதைவிட வாழ்ந்துள்ளார் எனபது பொருத்தமாக இருக்கும். இவர் நமக்கு நன்கு அறிமுகமானவர்தான். 'காந்தி' திரைப்படத்தில் ஜெனரல் டயர் காதாப்பதிரத்தில் நடித்தவர் இவர்தான்.

மற்றும் இதில் துப்பறியும் நிபுணர் லேபேல்ஆக நடித்துள்ள மைகேல் லோன்ச்டல் தன் பங்கை திறம்பட ஆற்றிஉள்ளார். படத்தின் பலமே அதன் நம்பகத்தன்மையும், நுணுக்கங்களும், சாதாரனத்தன்மையும், தொய்வில்லாத திரைக்கதையும் தான். கொலை திட்டத்தில் அவன் செய்யும் வொவ்வொரு செயல்திட்டமும் நுணுக்கமானவை. அவன் செய்யும் ஆள் மாறாட்ட குற்றம் இன்றும் இங்கிலாந்தில் 'The day of the Jackal fraud' என்று அழைக்கப்படுகிறது. மாற்ற ஹாலிவுட் படங்களை போல பறக்கும் கார்கள் கிடையாது, படபடக்கும் துப்பாகிகள் கிடையாது. பறந்து பறந்து தாக்கும், ஹெலிகாப்டரில் தொங்கும் நாயகத்தனமும் அறவே கிடையாது. நம் கண்முன்னே விரியும் கொலைதிட்டமும், மிகைப்படுத்தாத நடிப்பும் நம்மை படத்தோடு ஒன்றி, சீட் நுனியில் உட்காரவைதுவிடுகிறது.

படத்தின் ஒளிப்பதிவை குறிப்பிடாமல் இருக்க முடியாது. ஜீன் டோர்நிஎர் என்ற பிரெஞ்சு ஒளிப்பதிவாளர் பங்காற்றிஉள்ளார். ஏதோ காமெராவை மறைவிலிருந்து இயக்கியது போல அனைத்து காட்சிகளிலும் தத்ருபம். அதிலும் அந்த க்ளைமாக்ஸ் காட்ச்யில் அபாராம். இந்த விடுதலை நாள் கொண்டாட்ட பேரணி படபிடிப்பிற்க்கு, பிரெஞ்சு அரசாங்கம் அனைத்து போர் வீரர்கள்,தளவாடங்கள் அனைத்தையும் கொடுத்து உதவியது. அந்த படபிடிப்பில் கலந்துக்கொண்ட பிரான்ஸ் நாட்டு மக்கள் அதை உண்மை என்றே நினைத்துவிட்ட்னராம்.

சிறந்த எடிட்டிங்குக்கான ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டது இந்தப்படம்.

மறுபடியும் இப்படம் 1997 இல் புருஸ் வில்லிஸ் , ரிசேர்ட் கேர் நடித்து The Jackal என்ற பெயரில் வந்தது. ஆனால் அது செய்த காரியம் என்னவென்றால், மக்களை மறுபடியும் பழைய the day of the Jackal ஐ பார்க்கவைததுதான்.

நானும் பார்த்தேன். நீங்களும் மீண்டும் பாருங்கள். இனி

இப்படத்திலிருந்து கடைசி கட்ட காட்சியை காண்போமா?

ஆனால் இப்படத்தை பார்க்காதவர்கள் உச்சகட்ட காட்சியை முழு படத்தில் காண்பது மிகவும் சிறந்தது. அதனால் தான் அதை இங்கு சேர்க்கவில்லை.

வருகைக்கு நன்றி. பின்னூட்டம் ப்ளீஸ்.