Wednesday 30 September 2009

மகாத்மா காந்தி : சமாதானத்தின் யாத்திரீகர்.(video)




அக்டோபர் 2, இந்தியாவின் தந்தை மோகன் தாஸ் கரம்சந்த் காந்தியின் பிறந்தநாள். இந்தியாவில் இந்த நாளில் ஏறக்குறைய எல்லோருக்கும் உடனே நினைவுக்கு வருவது, விடுமுறையும், கசாப்பு மற்றும் மதுக்கடைகளின் மூடல் தான்! (ஆனாலும் எல்லாம் கிடைக்கும் என்பது வேறு விஷயம்.) நானும் இந்தியாவில் இருந்த வரையில் அதே நிலைத்தான். ஆனால் நான் தற்போது வசிக்கும் இங்கிலாந்திற்கு வந்தப் பிறகு, நம் நாட்டின் விடுதலைப் போராட்டதையும், நம் போராட்டத் தலைவர்களயும் நினைக்காத நாளே இல்லை! ஏனென்றால்   இங்கு உள்ள  சூழ்நிலை அப்படி. ஏன், எல்லா இடத்திலேயும் அப்படித்தான். இந்தியாவையும் சேர்த்து!
மகாத்மாவைப்பற்றி நாம் சிறுவயது முதலே நாம் படித்து, அறிந்து வைத்திருக்கிறோம். நம்மில் பலருக்கு, என்னையும் சேர்த்து அவரின் சிலக் கொள்கைகளில் சில முரண்பாடுகள் இருந்தாலும் அவரே நம் தேசப்பிதா. அவரை அப்படி அழைக்கக்கூடாது என்றும் சிலர் கூறுவர். ஆனாலும் அவரைத் தவிர வேறு யாரயும் அந்த இடத்தில வைத்தப் பார்க்க முடியவில்லை என்பதே உண்மை! வேறு
 யாரவது உண்டா? No chance!
நாம் காண இருக்கும் இந்த காணொளி, ஒரு அருமையான ஆவணப் படம்.வெவ்வேறுக் கோணங்களிலிருந்து தொகுக்கப்பட்டுள்ளது. அரியப்புகைப்படங்கள், காணொளிகள் கொண்டது. எல்லோரும், குறிப்பாக இளைஞர்களும், மாணவர்களும் பார்க்கவேண்டிய ஒன்றாகும். பார்த்துவிட்டு அப்படியே போய்விடாமல், நீங்களும் உங்களின் மரியாதையை பின்னூட்டம் முலமாக செலுத்தவேண்டுகிறேன். நன்றி.

























No comments:

Post a Comment

ஊக்க உரைகள்